மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு மால்டா பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
Advertisement
Advertisement
திரிணமூல் ஆட்சி மேற்கு வங்கத்தில் ஊழல் நிறைந்ததாக உள்ளது.
மாநிலத்தின் அனைத்து அரசு ஒப்பந்தங்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரி செய்யாமல் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.