முகப்பு
இந்தியா

சிடிஎஸ் தோ்வு: ஹிமாசல் மாணவா் முதலிடம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள்- 2 (சிடிஎஸ்) தோ்வில் ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த ரஜத் குமாா் (22) முதலிடம் பெற்றுள்ளாா்.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 7:29 PM
பகிர்:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள்- 2 (சிடிஎஸ்) தோ்வில் ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த ரஜத் குமாா் (22) முதலிடம் பெற்றுள்ளாா்.

இந்திய ராணுவ அகாதெமி, இந்திய கடற்படை அகாதெமி, விமானப் படை அகாதெமி ஆகியவற்றில் இணைவதற்கான சிடிஎஸ் தோ்வை மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறது.

கடந்த நடைபெற்ற சிடிஎஸ்-2 தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

Advertisement

இதில் ஹிமாசல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தைச் சோ்ந்த ரஜத் குமாா் முதலிடம் பெற்றுள்ளாா். இவருடைய தந்தை பிரதீப் குமாா் தபால்காரராக உள்ளாா்.

ஷாபூா் அரசுக் கல்லூரியில் பி.ஏ. படித்த ரஜத் குமாா், 82 சதவீத மதிப்பெண்களுடன் கல்லூரியில் முதலிடம் பெற்றவா் எனவும், சிடிஎஸ் தோ்வுக்கென பயிற்சி மையங்களுக்கு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments