முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தவா் கைது

Updated On : 26 ஏப்ரல், 2024 at 5:46 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் நான்டட் மாவட்டத்தில் வாக்காளா் ஒருவா் வாக்குப் பதிவு இயந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து உடைத்ததாக கைது செய்யப்பட்டாா்.

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட பையாசாஹிப் எட்கே தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நான்டட் காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீகிருஷ்ணா கொகடே கூறுகையில், ‘நான்டட் மாவட்டம் ராம்புரி வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாக்களிக்க வந்த பையாசாஹிப் திடீரென இரும்புக் கம்பியை எடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்தாா். அவரை அங்கிருந்த பாதுகாப்புப் படையினா் உடனடியாக கைது செய்தனா்.

Advertisement

உடைந்த வாக்குப் பதிவு இயந்திரம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய இயந்திரம் மூலம் உடனடியாக வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

பையாசாஹிப்பை கைது செய்யும்போது, ‘விவசாயிகள், தொழிலாளா்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும்’ என்று கோஷமிட்டாா். சட்டம் மற்றும் ஊடகவியலில் அவா் சான்றிதழ் படிப்புகளை படித்துள்ளாா். புணேயில் 10 மாதங்கள் தங்கிவிட்டு தனது கிராமத்துக்கு திரும்பியுள்ள அவருக்கு அரசியல் கட்சிகளுடன் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தப்படுகிறது’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments