முகப்பு
இந்தியா

உள்ஒதுக்கீடு தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு: சிராக் பாஸ்வான்

மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியின் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 3:15 am IST
சிராக் பாஸ்வான்
பகிர்:

பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியின் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கல்வி, பொருளாதாரம் என நல்ல பின்புலத்தில் இருந்து வந்தாலும்கூட பெரும்பாலான பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகின்றனா். எனவே, எஸ்.சி. பிரிவுக்கு வழங்கப்படும் 15 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரமளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன். ஆனால், அதன் தரவுகளை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. மக்களுக்கான கொள்கைகளை வடிவமைக்க மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments