முகப்பு
இந்தியா

மேலும் ஒரு ரயில் விபத்து! பயணிகள் ரயில் தடம் புரண்டது

பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 1:48 PM
பகிர்:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் சஹாரன்புர் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) பகல் 1.30 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு அதன்பின் ரயில் பணிமனைக்கு சென்று கொண்டிருந்த தில்லி - சஹாரன்புர் மெமு பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக பிற ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.

முன்னதாக, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘கோர்பா- விசாகப்பட்டினம் விரைவு ரயிலில்(18517)’ குளிர்சாதன வசதி கொண்ட 3 பெட்டிகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →