சோனியா காந்தியுடன் மனு பாக்கர் 
இந்தியா

சோனியா காந்தியை சந்தித்த மனு பாக்கர்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார் மனு பாக்கர்.

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மனு பாக்கர்.

நட்சத்திர துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் புதன்கிழமை சந்தித்தார்.

அவர்கள் இருவரும் சந்தித்த படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தகவலின்படி, அவர்களின் சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது. அதன் பிறகு மனு பாக்கர் அங்கிருந்து கிளம்பினார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர், புதன்கிழமை காலை தில்லி வந்தார். அவருக்கு அங்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கான மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.

மனு பாக்கரின் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவும் அவருடன் சென்றார். அவரை வரவேற்ற ரசிகர்களுக்கு மனு பாக்கர் தான் வென்ற பதக்கங்களைக் காட்டினார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பிறகு அவருக்கு பலரும் பூங்கொத்துகள், மாலைகள் அணிவித்து கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT