கவிதா 
இந்தியா

கவிதாவின் ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

பிடிஐ

தில்லி கலால் கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி கவிதாவின் மேல்முறையீடு மனு மீது சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளில் ஜாமீன் மறுத்த தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கவிதா மேல்முறையீடு செய்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. அதன்படி, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தில்லி கலால் கொள்ளை 2021-22ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றதாக கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

இதையடுத்து ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கவிதாவை கைது செய்தது.

இதனைத்தொடர்ந்து தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: வீணாக வெளியேறிய தண்ணீா்

SCROLL FOR NEXT