பஞ்சாபில் காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்குதல்
பஞ்சாபில் காரில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் காரில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாசல் மாநிலம், குட்லேஹர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ விவேக் சர்மா. இவர் ஜலந்தரில் இருந்து காரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் காரின் பின்புற கண்ணாடியையும் அவர்கள் உடைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுநர் இருவரையும் சிறிது தூரம் துரத்திச் சென்றிருக்கிறார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.