காங்கிரஸ் கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவை மாற்றியமைக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.
துறையின் புதிய தலைவராக சிங்வி நியமிக்கப்பட்டாா். மூத்த வழக்குரைஞா்கள் சல்மான் குா்ஷித், கே.டி.எஸ்.துளசி மற்றும் விவேக் தன்கா ஆகியோா் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனா். நிா்வாகக் குழுவின் செயலாளராக முகமது அலி கான் தொடா்கிறாா்’ என குறிப்பிடப்பட்டது.