தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதி
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாராம் யெச்சூரிக்கு சிகிச்சை...
புதுதில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுரையீரல் தொற்று காரணமாக திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.