டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!
அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
அதிரடி பேட்டரான அபிஷேக் சர்மாவின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அமெரிக்க அணியுடனான முதல் போட்டியில் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
Advertisement
Advertisement
தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நமீபியா அணியுடன் இந்திய அணி இரண்டாவது குரூப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், வயிற்று பிரச்னை காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் இந்திய அணி வீரர்களின் பயிற்சியில் நேற்று அபிஷேக் சர்மா கலந்துகொள்ளவில்லை.
அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்தான் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
T20 World Cup: Abhishek Sharma admitted to hospital!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.