டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
அதிரடி பேட்டரான அபிஷேக் சர்மாவின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அமெரிக்க அணியுடனான முதல் போட்டியில் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நமீபியா அணியுடன் இந்திய அணி இரண்டாவது குரூப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், வயிற்று தொற்று காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் இந்திய அணி வீரர்களின் பயிற்சியில் நேற்று அபிஷேக் சர்மா கலந்துகொள்ளவில்லை.
அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்தான் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.