ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கோப்புப்படம்
இந்தியா

மாதத்தில் ஒரு நாள் மாவட்டத்தில் தங்க வேண்டும்: அமைச்சர்களுக்கு ம.பி. முதல்வர் உத்தரவு

மத்திய பிரதேச அமைச்சர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய பிரதேச அமைச்சர்கள் மாதத்தில் ஒரு நாள் பொறுப்பு மாவட்டங்களில் தங்க வேண்டும் என்று முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மாநில அமைச்சர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்.

மாநில அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்களுக்கு இரண்டு மாவட்டங்கள் பொறுப்பு மாவட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பொருளாதார தலைநகரான இந்தூர் மாவட்டத்துக்கு முதல்வர் மோகன் யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.

துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தாவுக்கு ஜபல்பூர் மற்றும் தேவாஸ் மாவட்டங்களும், மற்றொரு துணை முதல்வர் ராஜேந்திர சுக்லாவுக்கு சாகர் மற்றும் ஷஹதோல் மாவட்டங்கள் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கைலாஷ் விஜயவர்கியாவுக்கு சட்னா மற்றும் தர் மாவட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சர்களும் தங்களின் பொறுப்பு மாவட்டங்களில் மாதத்தில் ஒரு இரவாவது தங்கி, ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

தேசிய விருது உறுதி... விமர்சிக்கப்படும் தி கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்!

மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூ. கே. பாலகிருஷ்ணன் மனைவி மீது காவல்துறை தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி!

நாம் முயன்றால் மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்! - M. K. Stalin

SCROLL FOR NEXT