கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு வந்த நபரால் உ.பி.யில் பரபரப்பு
தன்னை கடித்த பாம்பை பிடித்து டப்பாவில் அடைத்து வந்த நபரால் உத்தர பிரதேச மாநில மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னை கடித்த பாம்பை பிடித்து டப்பாவில் அடைத்து வந்த நபரால் உத்தர பிரதேச மாநில மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் ஹரிஸ்வரூப் மிஸ்ரா (40). இவரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்டு பதற்றமடையாமல் கடித்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் உயிருடன் அடைத்துள்ளார்.
பின்னர் அந்த பாம்புடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் பாம்பை காட்டி, தன்னை பாம்பு கடித்து விட்டதாகவும், அவசரமாக சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹரிஸ்வரூப்பின் தையரியத்தை கண்டு வியந்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
Advertisement
Advertisement
சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹரிஸ்வரூப், பாம்பு கடித்த இடத்தில் கையைக் காட்டி, கடித்த உடனேயே பாம்பை பிடித்ததாக தெரிவித்தார். இந்த விடியோவை மருத்துவமனை நிர்வாகம் பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தன்னை கடித்த பாம்பை பிடித்து டப்பாவில் அடைத்து வந்த ஹரிஸ்வரூப்பின் தையரித்தை மருத்துவமனையில் இருந்தவர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.