கோப்புப் படம் 
இந்தியா

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்: இறுதி ஒதுக்கீடு இன்று வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஆக.30) வெளியாகிறது.

Din

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஆக.30) வெளியாகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியே பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்வது கடந்த 27-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. செப். 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செப். 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT