முகப்பு
இந்தியா

டிச. 7-ல் அஸ்ஸாம் அமைச்சரவை விரிவாக்கம்!

அஸ்ஸாம் அமைச்சரவையில் கூடுதலாக 4 அமைச்சர்கள் பொறுப்பேற்கவுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:01 PM
ஹிமந்த பிஸ்வ சர்மா - PTI
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 6:14 PM

அஸ்ஸாம் அமைச்சரவையில் டிச. 7ஆம் தேதி புதிதாக 4 அமைச்சர்கள் பொறுப்பேற்கவுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களான பிரசாந்த பூகன், கெளசிக் ராய், கிருஷ்னேன்டு பால் மற்றும் ரூபேஷ் கோலா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அஸ்ஸாம் பேரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கவுள்ளது.

Advertisement

அஸ்ஸாம் சட்டப்பேரவையில் தற்போது முதல்வர் உள்பட 16 அமைச்சர்கள் உள்ளனர். இந்த அமைச்சர்கள் மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கான பல்வேறு துறைகளை கவனித்து வருகின்றனர். இவர்களின் வேலை பளுவை பகிர்ந்தளிக்கும் நோக்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அஸ்ஸாமில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து டிச. 7ஆம் தேதி கூடுதலாக 4 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களான பிரசாந்த பூகன், கெளசிக் ராய், கிருஷ்னேன்டு பால் மற்றும் ரூபேஷ் கோலா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.