நக்சல்கள் சுட்டுக்கொலை கோப்புப்படம்.
இந்தியா

சத்தீஸ்கரில் மேலும் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

DIN

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் நேந்திரா மற்றும் புன்னூர் கிராமங்களின் வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நடந்த என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் ஒரு ரைபிள் மற்றும் நக்சல்கள் தொடர்பான பிற பொருட்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இச்சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவுகிறது.

முன்னதாக வியாழக்கிழமை, நாராயண்பூர் மாவட்டத்தின் தெற்கு அபுஜ்மத் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 7 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

இத்துடன், பிஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தர் மண்டலத்தில் நடந்த தனித்தனி என்கவுன்டர்களில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 217 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT