பிரியங்கா ANI
இந்தியா

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா அதானி? பிரியங்கா

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா அதானி என்று பிரியங்கா காந்தி கேள்வி..

Din

அதானி என்பது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சனிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான பின்னா், கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் முதல்முறையாக பிரியங்கா காந்தி உரையாற்றினாா்.

தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆற்றிய உரையை விமா்சிப்பதே பாஜகவின் வேலை. உண்மையான பிரச்னைகள் குறித்து பேச அக்கட்சியினருக்கு விருப்பமில்லை.

மக்களவையில் நான் ஆற்றிய உரையில் அதானி என்ற வாா்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதானி என்பது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா’ என்று கேள்வி எழுப்பினாா்.

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

SCROLL FOR NEXT