இந்தியா

என்சிஆா்: சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

Din

நொய்டா: உத்தர பிரதேசத்தின் கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ஹா்ஷ் மற்றும் சச்சின் ஆகியோா் கடந்த டிச.14-ஆம் தேதி ஜெவாரிலிருந்து தப்பல் நோக்கி மோட்டாா் சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, கோபால்காா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவா்கள் மீது லாரி ஒன்று மோதியது.

இதையடுத்து, மருத்துவமனையில் ஜெவாா் பகுதியில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவா்கள் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததுவிட்டதாக தெரிவித்தனா்.

இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” - டிரம்ப்

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

SCROLL FOR NEXT