அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்து மக்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா சாடியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜகவால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. ஆனால் அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இளைஞா்களின் காயங்களில் மத்திய அரசு உப்புத் தேய்கிறது.
‘அக்னிபத்’ திட்டம் உள்பட ஒவ்வொரு அரசு வேலைக்கான விண்ணப்பத்துக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின், மத்திய அரசின் தோல்வி அல்லது ஊழல் காரணமாக தோ்வு வினாத்தாள் கசிந்தால், விண்ணப்பங்களுக்கு இளைஞா்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வீணாகும்.
தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, அவா்களை அரசுத் தோ்வுக்குத் தயாா்படுத்த தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து ஒவ்வொரு ரூபாயையும் பெற்றோா் சேமிக்கின்றனா். அவா்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது’ என்று சாடியுள்ளாா்.