இந்தியா

அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்ம மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு

DIN

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார்.

இவர், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக, திங்கள்கிழமை (டிச. 23) இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இவர் வியாழக்கிழமை (டிச. 26) மருத்துவமனையின் குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரஜாபத்தின் கழுத்தில் காயமும், அவரருகே தற்கொலை குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை: 4 பேர் கைது!

மீண்டும் திமுக ஆட்சிதான்! பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சு!

சிங்காரவேலரின் புகழை வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்: மு.க.ஸ்டாலின்

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!!

போனில் எந்த பிரச்னையும் இல்லை.. உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்!

SCROLL FOR NEXT