இந்தியா

கோட்டா நீட் மாணவர் தற்கொலை: விடுதிக்கு சீல்!

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ராஜஸ்தான் கோட்டாவில் மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவர் கோட்டா நகரில் கஞ்சன் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஜன.23 அன்று மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

விடுதியின் அறையில் தற்கொலை செய்துகொள்ள இயலாத வகையிலான மின்விசிறிகள் பொருத்தப்படவில்லை. இது மாணவர்களின் பாதுகாப்புக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும் எனத் தெரிவித்து விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோட்டா மாவட்ட ஆட்சியர் ரவீந்திர கோஸ்வாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT