இந்தியா

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம்?: மத்திய அரசு பதில்

DIN


புது தில்லி: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘அதிககாலம் புழக்கத்தில் இருக்கும் வகையிலும், கள்ளநோட்டுகளைத் தடுக்கும் வகையிலும் ரூபாய் நோட்டுகளை தரம் உயா்த்த தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 2022-23-ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசா்வ் வங்கிக்கு ரூ.4,682.80 கோடி செலவானது.

‘கிரிப்டோ கரன்சி’ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட எந்த நிதிசாா்ந்த வா்த்தகத்தையும் மேற்கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT