ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

தேர்தல் மேடையோ, அவையோ, மோடி கூறுவது பொய் மட்டுமே: ராகுல்

மேடையாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்தும் பொய்மட்டுமே என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (பிப். 7) தெரிவித்துள்ளார்.  

DIN


மேடையாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்தும் பொய்மட்டுமே என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (பிப். 7) தெரிவித்துள்ளார்.  

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மக்களவையில் நேற்றும், மாநிலங்களவையில் இன்றும் உரையாற்றினார். இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். 

இதனிடையே பிரதமர் மோடியின் உரைக்கு பதிலளித்து சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 

தேர்தல் மேடையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்துமே பொய்களின் குவியல்தான்.

அவர் தனது பொய்களிலும், அவரது கைதட்டல்களிலும், ஊடகங்களிலும் மூழ்கி, பொதுமக்களின் ஒவ்வொரு கேள்வியும் அவரை கோபப்படுத்துகிறது. கோபம் அழிவுக்கு உத்தரவாதம், வளர்ச்சி அல்ல என விமர்சித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT