முகப்பு
இந்தியா

அயோத்தியில் கேஜரிவால், பகவந்த் மான்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 11:15 AM
அயோத்தியில் கேஜரிவால், பகவந்த் மான்
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனர்.

இந்த கோயிலின் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அரவிந்த் கேஜரிவாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்திருந்தார்.

அயோத்தியில் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் குடும்பத்தினர்

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று தில்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் இன்று தரிசனம் மேற்கொண்டனர்.

தரிசனன் குறித்து எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேஜரிவால், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →