முகப்பு
இந்தியா

மீண்டும் மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்: ஆம் ஆத்மி தலைவர் நலம் விசாரிப்பு!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த ஆம் ஆத்மி தலைவர்..

Updated On : 18 பிப்ரவரி 2026, 4:36 pm IST
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பகிர்:

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் உடல்நிலை குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை சோர்வு ஏற்பட்டதன் காரணமாக, பகவந்த் மான் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு திங்கள்கிழமை அதிகாலையில் பகவந்த் மான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கமான 'யுத் நாஷியன் விருத்' இன் கீழ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோகா சென்றார்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து உடல் அசௌகரியம் ஏற்பட்டதன் காரணமாக திங்கள்கிழமை மாலை மீண்டும் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செவ்வாக்கிழமை மாலை ஃபோர்டிஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

முதல்வர் பகவந்த் மானின் உடல்நிலை குறித்து முழுவதும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையான இன்று நேரில் சென்று பகவந்த் மானின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

summary

Aam Aadmi Party leader Manish Sisodia on Wednesday met Punjab Chief Minister Bhagwant Mann at Fortis Hospital to inquire about his health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.