இந்தியா

அமலாக்கத்துறை சம்மனை 6-வது முறையாக நிராகரித்த கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆறாவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ளார்.

DIN

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால் அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டி நேரில் ஆஜராகவில்லை.

தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆறாவது முறையாக இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கேஜரிவால் இன்றும் ஆஜராகவில்லை.

தில்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மார்ச் 16-ம் தேதி அடுத்த விசாரணை தேதியில் அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

காஞ்சிபுரத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT