இந்தியா

மாணவன் தற்கொலை: பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு

DIN

10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து இறந்த மூன்று நாள்களுக்குப் பிறகு பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தில்லி காவல்துறை.

தற்கொலைக்குத் தூண்டியதாக மாணவனின் பெற்றோர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி சங்கர்விஹாரில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளியில் படித்து வந்த மாணவன் வீட்டில் துப்பாட்டா பயன்படுத்தி தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

மாணவனுக்கு தேர்வெழுத அனுமதி சீட்டு தரவில்லையென்றும் பள்ளியில் நாற்காலியை உடைத்ததற்காக பெரிய தொகையை அபராதமாக பள்ளி நிர்வாகம் கேட்டதாகவும் மாணவனின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது மகன் மற்றும் மனைவியிடம் பள்ளி நிர்வாகம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT