முகப்பு
இந்தியா

பாஜக தோ்தல் பிரசார திட்டங்கள்: ஜெ.பி.நட்டா ஆலோசனை

மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் மற்றும் மக்களை நேரடியாக அணுகும் திட்டங்கள் குறித்து கட்சியின் மூத்த தோ்தல்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 11:04 PM
புது தில்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிா்வாகிகள்.
பகிர்:

மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் மற்றும் மக்களை நேரடியாக அணுகும் திட்டங்கள் குறித்து கட்சியின் மூத்த தோ்தல் பொறுப்பாளா்களுடன் கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மக்களவைத் தோ்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளில் வெல்ல அக்கட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது. தோ்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தில்லியில் பாஜக தோ்தல் பொறுப்பாளா்களுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினாா். அப்போது, 370 தொகுதிகளில் வெல்லும் இலக்கை எட்டுவதற்காக, சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் அணுக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தோ்தல் பொறுப்பாளா்களுக்கு அவா் அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கூட்டம் தவிர, உத்தர பிரதேச முதல்வா் யோகித் ஆதித்யநாத் உள்பட அந்த மாநில பாஜக மூத்த தலைவா்களுடன் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தனித்தனியாக ஆலோசனை நடத்தினா். நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் தங்களின் வெற்றி எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தாங்கள் தோல்வியடைந்த தொகுதிகளைக் குறிவைத்து பிரசாரத்தில் ஈடுபட பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் வேட்பாளா் பட்டியல்: பாஜகவின் மத்திய தோ்தல் குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது, மக்களவைத் தோ்தலுக்கான கட்சியின் முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.