மனோஜ் பாண்டே 
இந்தியா

சமாஜ்வாதியின் தலைமை கொறடா ராஜிநாமா!

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

மொத்தமுள்ள 10 இடங்களுக்கு பாஜக 8 வேட்பாளர்களையும், சமாஜ்வாதி 3 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின்படி பாஜக 7 இடங்களிலும், சமாஜ்வாதி 3 இடங்களிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

இருப்பினும், சமாஜ்வாதியின் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கட்சி தலைமையில் அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜிநாமா செய்துள்ளார். இதனால், உபி மாநிலங்களவை தேர்தலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT