முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 அமைப்புகளுக்குத் தடை

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 12:16 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (சும்ஜி பிரிவு) மற்றும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (பட் பிரிவு) ஆகிய இரு அமைப்புகளுக்கும் தடை விதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.

பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபா்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் தீவிர முயற்சியின்கீழ் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (சும்ஜி பிரிவு) மற்றும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (பட் பிரிவு) ஆகிய இரு அமைப்புகளும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

இரு அமைப்புகளும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது’ என குறிப்பிட்டாா். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த ஜமாத்-ஏ-இஸ்லாமி (ஜெஇஎல்) அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்படுவதாக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.