முகப்பு
இந்தியா

ஆதித்யா விண்கலம் ஜன.6-ல் ‘எல் 1’ புள்ளியை அடையும்!

ஆதித்யா எல் 1 விண்கலம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி எல் 1 புள்ளியை அடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜனவரி 2024, 12:55 pm IST
இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்
பகிர்:

ஆதித்யா எல் 1 விண்கலம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி எல் 1 புள்ளியை அடையும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியது:

Advertisement

Advertisement

"ஆண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். செயற்கைக்கோள்களுக்கு தேவையான சாதனங்கள் தயாரித்தல், சோதனையை நிறைவு செய்தல் போன்றவை சரியாக நடைபெறும் பட்சத்தில் அதிகளவில் விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளது. 

இந்தாண்டு ககன்யான் திட்டத்திற்கான தேவையானவற்றை தயார் செய்யும் ஆண்டாக அமையவுள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்படவுள்ளன. மேலும், ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளும் செலுத்தப்படவுள்ளன.

ஆதித்யா எல் 1 விண்கலம் வருகின்ற 6-ஆம் தேதி எல் 1 புள்ளியை அடையும். அதன்பிறகு இறுதிகட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments