முகப்பு
இந்தியா

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும்: மாயாவதி

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என பாஜக அரசைக் கண்டித்து மாயாவதி விமர்சித்துள்ளார். 

Updated On : 1 ஜனவரி, 2024 at 1:27 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:56 PM

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என பாஜக அரசைக் கண்டித்து மாயாவதி விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக மாயாவதி எக்ஸில் வெளியிட்ட பதிவில், 

மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டில் அரசாங்கம் உண்மையான தேசபக்தியையும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் நிறைவேற்ற வேண்டும். 

Advertisement

முன்பு காங்கிரஸ் இப்போது பாஜக தலைமையிலான சாதிவெறியால் கோடிக்கணக்கான ஏழைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

மக்களுக்குச் செலவுக்கு பணம் இல்லை என்றால் வளர்ச்சி குறித்துப் பேசி என்ன பயன்? வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும்போது வளர்ந்த இந்திய எப்படிச் சாத்தியமாகும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.