இந்தியா

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும்: மாயாவதி

DIN

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என பாஜக அரசைக் கண்டித்து மாயாவதி விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக மாயாவதி எக்ஸில் வெளியிட்ட பதிவில், 

மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டில் அரசாங்கம் உண்மையான தேசபக்தியையும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் நிறைவேற்ற வேண்டும். 

முன்பு காங்கிரஸ் இப்போது பாஜக தலைமையிலான சாதிவெறியால் கோடிக்கணக்கான ஏழைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

மக்களுக்குச் செலவுக்கு பணம் இல்லை என்றால் வளர்ச்சி குறித்துப் பேசி என்ன பயன்? வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும்போது வளர்ந்த இந்திய எப்படிச் சாத்தியமாகும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT