முகப்பு
இந்தியா

கேரளம்: மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

கேரளத்தின் திருச்சூரில் புதன்கிழமை நடைபெறும் பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

கேரளத்தின் திருச்சூரில் புதன்கிழமை நடைபெறும் பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். 

திருச்சூரில் பிரதமர் மோடியை வரவேற்க வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தேக்கிங்காடு மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கேரள பயணத்திற்கு முன்னதாக பிரதமர் இன்று லட்சத்தீவுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மோடியின் திருச்சூர் பயணம் தென் மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவமாக மாறும் என பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →