மின் கம்பத்தில் ஏறிய நபர்: மதுவால் உண்டான விபரீதம்
மது போதையில் மின்சாரம் தாக்கிய நபர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நொய்டா: மது போதையில் மின் கம்பத்தில் ஏறிய கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த நபர், மின்சாரம் தாக்கியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஜெவார் பகுதியில் 35 வயதுள்ள நோஷாத் என்பவர் மின்சாரம் தாக்கியதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படதாக காவலர்கள் தெரிவித்தனர்,
மது போதையில் , மின் கம்பத்தில் ஏற முயன்ற நோஷாத் டிரான்ஸ்பார்மருக்கு அருகில் உள்ள மின்சார கம்பத்தில் 25 அடி வரை ஏறியுள்ளார். அங்கிருந்த மின்கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: புதிதாக கல்யாணமான மகனின் முடிவு: தாயின் தற்கொலைக்குக் காரணமா?
அதற்குள் அருகிலிருந்த மக்கள் மின் கம்பத்துக்கு அருகே கூடிவிட்டனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நிலையாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.