இந்தியா

மின் கம்பத்தில் ஏறிய நபர்: மதுவால் உண்டான விபரீதம்

DIN

நொய்டா: மது போதையில் மின் கம்பத்தில் ஏறிய கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த நபர், மின்சாரம் தாக்கியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஜெவார் பகுதியில் 35 வயதுள்ள நோஷாத் என்பவர் மின்சாரம் தாக்கியதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படதாக காவலர்கள் தெரிவித்தனர், 

மது போதையில் , மின் கம்பத்தில் ஏற முயன்ற நோஷாத்  டிரான்ஸ்பார்மருக்கு அருகில் உள்ள மின்சார கம்பத்தில் 25 அடி வரை ஏறியுள்ளார். அங்கிருந்த மின்கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

அதற்குள் அருகிலிருந்த மக்கள் மின் கம்பத்துக்கு அருகே கூடிவிட்டனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நிலையாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றம் புதிது படத்தின் தொடக்க விழா - புகைப்படங்கள்

தாயுமானவள்! அமலா பால்..

ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

SCROLL FOR NEXT