முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம் குறித்து விமர்சிப்பவர்கள்...: மம்தா பானர்ஜி

அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
மம்தா பானர்ஜி
பகிர்:

நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக கொல்கத்தா பல வருடங்களாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் இடம்பெற்றுவருவதைக் குறிப்பிட்டு மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இது குறித்து மம்தா பேசும்போது,  “என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால் மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்கும்படி நடந்துகொண்டால் நான் எதிர்ப்பேன். மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்க முயல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஷேக்கின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூவரைத் தாக்கி அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியது தொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.

ஷாஜஹானுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மாநிலத்தின் பொது விநியோகத் துறையில் ஊழல் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →