இந்தியா

இந்தியாவில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு!

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 400-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கரனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளதாக மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 6 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் மற்றும் அசாமில் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உள்ளது. பெருந்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,44,81,893  ஆக உள்ளது. இதுவரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,402 ஆக உள்ளது. 

நாட்டில் 819 பேர் புதியவகை ஜெ.என்.1 வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர.குள்ளம்பட்டி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு தோ்வு: சேலம் மத்திய சிறைக் கைதிகள் 23 போ் தோ்ச்சி

தமிழா்கள் குறித்த சா்ச்சை பேச்சைக் கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டம்

மேட்டூா் ஜிவி மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT