முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:17 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூரில் மாவட்டத்தில் உள்ள பெலம் குட்டா மலைகள் அருகே நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது நடந்த என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →