நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் 
இந்தியா

நிதீஷ் குமார் கூட்டணி விலகல்? : ராஷ்டிரிய ஜனதா தலைவர்கள் சந்திப்பு

முதல்வர் நிதீஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகுவதாக வெளியானது குறித்து விவாதிக்க ராஷ்டிரிய ஜனதா தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

DIN

பாட்னா: பிகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் ராஷ்டிரியா ஜனதா தளக் கட்சியின் தலைவர்கள், கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சந்திப்புக்காகக் கூடியுள்ளனர்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மஹாகத்பந்தன் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் விலகவுள்ளதாக வெளியான தகவலினால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மனைவி ராப்ரி தேவி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

நிதீஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினால் காங்கிரஸ், மூன்று இடதுசாரி கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்த்தாலும் பெரும்பான்மை வகிக்க 8 எம்எல்ஏக்கள் குறைவாக இருப்பர்.

இந்தக் குழப்பங்கள் குறித்து விவாதிக்க ராஷ்டிரிய ஜனதாவின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT