கடும் குளிர்: அயோத்தியில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!
கடும் குளிர், பனிமூட்டம் காரணமாக அயோத்தியில் பிப்.3 வரை பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடும் குளிர், பனிமூட்டம் காரணமாக அயோத்தியில் பிப்.3 வரை பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி பிப்ரவரி 3 வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 - மாலை 3 வரை பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.
மேலும், பள்ளிகள் செயல்படும் நேரத்தில் குளிரிலிருந்து பாதுகாக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
படிக்க: நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு!
ஞாயிறன்று தில்லி, உ.பி மற்றும் பிகார் மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அயோத்தியில் அடுத்த 6 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என அந்த மாநில வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.