இந்தியா

காந்தி நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

DIN

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் "இந்த புண்ணிய திதியில் மதிப்பிற்குரிய அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டிற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டிற்காக அவர்களின் நோக்கங்களை  நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றது" என அவர் தெரிவித்தார்.

1948ல் காந்தி நாதுராம் விநாயக் கோட்சே எனும் இந்து தேசியவாதியால் கொலை செய்யப்பட்டார். 1949-ல் கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT