இந்தியா

லஞ்சம் அளிக்க முயன்ற ஆசிரியர் கைது!

DIN

மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அலுவலருக்கு ரூ. 50,000 லஞ்சம் அளிக்க முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கூறி லஞ்சம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரசால் நடத்தப்படும் குப்பி ஆரம்பநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் விஷால், தேர்தல் பயிற்சி நிகழ்வுகளுக்கு வராததால் அவர் மீது இடைநீக்க நடவடிக்கை எடுத்ததாக தபஸ்யா பரிஹார் ஐஏஎஸ் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தனது இடைநீக்கத்தைத் திரும்பப்பெறக் கூறு ஐஏஎஸ் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தபஸ்யா அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் விஷால் கைது செய்யப்பட்டார். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வரும் புதன் கிழமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தவிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் பெற்றோர் உள்பட 13 பேர் கைது

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

SCROLL FOR NEXT