இந்தியா

கங்கனாவை அறைந்த காவலர் பணியிட மாற்றம்!

பாஜக எம்.பி. கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

DIN

கடந்த மாதம் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை தாக்கியதாக, குற்றம் சாட்டப்பட்ட சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கடந்த மாதம் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லியில் கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்திருந்தார்.

கங்கனா அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், கங்கனா முன்னொரு சமயத்தில் விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதால், அதிருப்தியடைந்திருந்தார். இதனால் தான் குல்விந்தர் கவுர், கங்கனாவை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். குல்விந்தர் கவுரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது குல்விந்தர் கவுர் சண்டீகர் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

SCROLL FOR NEXT