முகப்பு
இந்தியா

இரண்டாகப் பிரிந்த பஞ்சவடி விரைவு ரயில்; பயணிகள் காயமின்றி தப்பினர்

பஞ்சவடி விரைவு ரயில் பாதிவழியில் இரண்டாகப் பிரிந்த நிலையில் பயணிகள் காயமின்றி தப்பினர்.

Updated On : 6 ஜூலை 2024, 11:41 am IST
விரைவு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

மும்பை: பஞ்சவடி விரைவு ரயில், நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்து விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதிவிரைவு ரயிலான பஞ்சவடி விரைவு ரயில், மும்பையிலிருந்து மன்மத் இடையே இயக்கப்படுகிறது.

உடனடியாக விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளை இணைத்து 40 நிமிடத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச சென்றது.

Advertisement

Advertisement

நாசிக் மாவட்டம் மன்மத் சந்திப்பிலிருந்து இன்று காலை தனது பயணத்தைத் தொடங்கியது. மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கசரா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. 8.40 மணிக்கு திடீரென ரயிலின் 4 மற்றும் ஐந்தாவது பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

உடனடியாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக, ரயில் பெட்டிகள் பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்படலாம். ரயில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வேகத்தை அதிகரித்தல் அல்லது வேகத்தைக் குறைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments