FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி: கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலி

கடந்த 24 மணி நேர மழையில் உ.பி.யில் 13 பேர் உயிரிழப்பு

Updated On : 6 ஜூலை 2024, 10:06 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

நிவாரணத் துறையின் அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை, ஃபதேபூரில் மின்னல் தாக்கி இரண்டு பேர் பலியாகினர், மேலும் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் மற்றொருவரும் பலியாகினர்.

Advertisement

Advertisement

புலந்த்ஷாஹர், கன்னோஜ், மெயின்புரி, கௌசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மைன்புரி மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா ஒருவர் இறந்ததாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 18.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

45 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது. ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நேபாள எல்லையில் உள்ள மாவட்டங்களின்உள்ளூர் நிர்வாகத்தையும் நிவாரணத் துறை எச்சரித்துள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் பெய்த கனமழையைக் கருத்தில் கொண்டு, எல்லையோர மாவட்டங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில நிவாரண ஆணையர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments