கோப்புப் படம். 
இந்தியா

உ.பி: கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலி

கடந்த 24 மணி நேர மழையில் உ.பி.யில் 13 பேர் உயிரிழப்பு

DIN

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

நிவாரணத் துறையின் அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை, ஃபதேபூரில் மின்னல் தாக்கி இரண்டு பேர் பலியாகினர், மேலும் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் மற்றொருவரும் பலியாகினர்.

புலந்த்ஷாஹர், கன்னோஜ், மெயின்புரி, கௌசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மைன்புரி மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா ஒருவர் இறந்ததாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 18.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

45 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது. ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நேபாள எல்லையில் உள்ள மாவட்டங்களின்உள்ளூர் நிர்வாகத்தையும் நிவாரணத் துறை எச்சரித்துள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் பெய்த கனமழையைக் கருத்தில் கொண்டு, எல்லையோர மாவட்டங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில நிவாரண ஆணையர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு புத்துயிர்: அஸ்வினி வைஷ்ணவ்

ஜம்மு-காஷ்மீர்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: ஒருநபர் ஆணையம், சிறப்பு விசாரணைக் குழு ரத்து

SCROLL FOR NEXT