ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 75வது பிறந்தநாள் இன்று (ஜூலை 8) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அவரது மகனும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி தனது தாயார் விஜயம்மா மற்றும் குடும்பத்தினருடன் ஆந்திர பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தில் புலிவேண்டுலாவிலுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும், அம்மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவராகவும் போற்றப்பட்ட ராஜசேகர ரெட்டி, 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.