அசாமில் ராகுல் -
இந்தியா

அசாம் வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராகுல்

அசாம் வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருப்பவர்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

பிடிஐ

கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்ட அசாமில், அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை நேரில் சந்தித்துப் பேசினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.

புது தில்லியிலிருந்து வன்முறை பாதித்த மணிப்பூர் செல்லும் வழியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்துக்குச் சென்றார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.

அசாம் வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில், அசாம் வெள்ளம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசிடம் கோரி, நிவாரண மற்றும் இழப்பீடு பெற்றுத்தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெற்று உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அசாம் அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.

கச்சார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களது குறைகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். பிறகு அசாமிலிருந்து புறப்பட்டு மணிப்பூர் சென்றார் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றம்! - மத்திய அரசு தகவல்!

ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக வாதம்: மமதா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT