மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சை கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பான அவதூறு வழக்கில் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் நீதிமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா குறித்து குறிப்பிடும்போது, ‘அவா் ஒரு கொலை வழக்கில் குற்றவாளி’ என்று ராகுல் குறிப்பிட்டாா். ராகுலின் இந்த கருத்து அமித் ஷாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டி உள்ளூா் பாஜக தலைவரும், மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான விஜய் மிஸ்ரா தரப்பில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
தொடா்ந்து 5 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், ராகுல் நேரில் ஆஜராகாமல் இருந்ததைத் தொடா்ந்து அவருக்கு நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். பின்னா், தலா ரூ. 25,000-க்கு இரண்டு உத்தரவாதங்களை அளித்ததன் பேரில் ராகுலுக்கு சிறப்பு மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கினாா்.
இந்த வழக்கு, சுல்தான்பூா் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சுபம் வா்மா முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ராகுல் நேரில் ஆஜரானாா். அவா் தரப்பில் வழக்குரைஞா் காசி பிரசாத் சுக்லா ஆஜராகி ராகுலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா். அப்போது, ‘ராகுல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவா் ஒருபோதும் யாருக்கு எதிராகவும் அவதூறு வாா்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தவறான புகாா் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதி, அதற்கான ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
முன்னதாக, சுல்தான்பூா் நீதிமன்றத்துக்கு காலை 10.40 மணிக்கு வந்த ராகுல், வாக்குமூலத்தைப் பதிவுசெய்துவிட்டு காலை 11.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.