முகப்பு
இந்தியா

ராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு பற்றி..

Updated On : 9 மார்ச், 2026 at 11:33 AM
ராகுல் காந்தி
பகிர்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 12-ல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுல்தான்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், புகார்தாரரின் வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, சிறப்பு நீதிபதி சுபம் வர்மா இந்த வழக்கில் மேலும் வாதங்களை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, பிப்ரவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும், தனது வாதத்திற்கு ஆதாரங்களை முன்வைப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் யாருக்கும் எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை, யாரையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியதில்லை. எனது அறிக்கையைத் திரித்து ஒரு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியதாக அவரது வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா கூறினார்.

இந்த வழக்கு மார்ச் 12ல் விசாரணை நடத்தப்படும் என எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

summary

A special MP/MLA court here on Monday scheduled March 12 for hearing arguments in a 2018 defamation case against Leader of Opposition in the Lok Sabha and Rae Bareli MP Rahul Gandhi related to his remarks against Union Home Minister Amit Shah.

முழு கட்டுரையைப் படிக்க →