ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு..
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஸ்ரீ ராம நவமி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, அடுத்த விசாரணை மார்ச் 28 (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன் கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.
வழக்குத் தொடர்ந்தவர் தரப்பு வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே கூறுகையில்,
Advertisement
இந்த வழக்குத் தொடர்பான வாதங்கள் மார்ச் 27 (வெள்ளிக்கிழமை) நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் ஸ்ரீராம நவமி விடுமுறையின் காரணமாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
முந்தைய விசாரணை அமர்வின்போது, ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் அடங்கிய ஒலி மற்றும் காணொலி ஆதாரங்களை, அவரது உண்மையான குரலுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கக் கோரி, வழக்குத் தொடர்ந்தவர் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் மார்ச் 28 (நாளை) விசாரணை நடத்தப்படுவதாக எம்பி/எம்எல்ஏ நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.