FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: பாக். பயங்கரவாதிகளே காரணம்!

ஜம்முவில் பாக். பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல்: 5 வீரர்கள் பலி

Updated On : 9 ஜூலை 2024, 8:56 am IST
- படம் | பிடிஐ
பகிர்:

ஜம்முவில் கத்துவா மாவட்டத்தில் பிலாவரையொட்டிய லோஹாய் மல்ஹார் பகுதியில் திங்கள்கிழமை(ஜூலை 8) ராணுவ வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து கத்துவா பகுதியில் பாதுகாப்புப்படையினரும் காவல்துறையினரும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 9) அதிகாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் உள்ளூர்வாசிகள் உதவியுடன் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைப் சுபேதார் அனந்த் சிங், ஜமால் சிங், அனுஜ் சிங், அசர்ஷ் சிங், நாயக் வினோத் குமார் ஆகிய 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments